Sunday 30 December 2018

உறக்கம் வராத இவ்விரவை மடித்து
விடியலெனும் உறைக்குள் வைக்கிறேன்.
விடியப் போகும் பொழுதினை
இரவைக்கொண்டு மூடுவேன்
இரவைத் தேடும் நிலவைக்
கையில் எடுத்துச் செல்கிறேன்
விரலிடுக்கில்
வழியும் நிலவின் ஒளியை
விழியில் ஏந்திக் கொள்ளுவேன்.
காரிருள் தேடும் கதிரவனைக்
ஆழ்கடல் சென்று கரைத்திடுவேன்
வெள்ளி அலைகளாய்த் துள்ளும் கடலை
மனதுக்குள்ளே அடைத்தெடுத்து
இரவும்
பகலும்
கடலும்
கதிரும்
நானே என்று கூத்திடுவேன்.

No comments:

Post a Comment