Sunday 30 December 2018

விழி மூடிய தருணம் துளிர்த்த கனவினூடே பயணித்திருக்கிறேன்
விடைபெறுகையில் நீ
இதழ்களுக்குள் மறைத்துக்கொண்ட சொல்லொன்றைத் தேடுகிறேன்.
வந்த பாதையெங்கும் பார்த்துவிட்டேன்
எங்கும் சிந்திவிடவில்லையது.
கனவுப் பாதையிலும்
காணவில்லை அந்தச் சொல்
சாக்குபோக்கு ஏதுமின்றி சட்டென்று சொல்லிவிடு
விடியல் பொழுதில்
இமைக்கதவுகள் திறந்தென்னை
இரக்கமின்றி வெளித் தள்ளுமுன்.

No comments:

Post a Comment