Sunday, 15 September 2024

ஒரு மென்னிறகு இத்தனை கனம் கொண்டதா?
மயிற்தோகையின் சிறுமயிர் கீறி
குருதி வழிந்ததுண்டா?
மொழியற்ற பொதுப்பார்வையின் வீரியம் நெஞ்சு துளைத்ததுண்டா
பொருள் பொதிந்த சிறப்பு நோக்கில்
இதயம் சுக்கு நூறாய்ச் சிதையுமா?
பார்வை வீசிய வார்த்தைகள் உயிர் பிளக்குமா?
போய் வா எனக் கையசைத்து விடைதருதலினால்
காலடியில் நிலம் நழுவுமா?
எல்லாம் நேர்ந்த பின்
உலவும் ஒரு உருவு தன்னைப்
பிண்டமென்று கொளல் மட்டும் தானே தீர்வு

Saturday, 14 September 2024

ஒவ்வொரு முறையும் 
உன் கையளிக்காமலே
அந்தச் சொற்களை
திரும்பக் 
கொண்டு வந்துவிடுகிறேன்