Tuesday 25 December 2018

காதலென்பது

அழகும் ரசனையும் நாணமும் கலந்ததே காதலெனக் காலமெல்லாம் கதைகள் சொன்னார்.
சுண்டியிழுக்கும் தோலின் நிறமும்
அளவுகளுக்குள் அடங்கும் வனப்பும் தேடும் மனங்கள்தானே இங்கு.
சாமுத்ரிகா வரையறைக்குள் அடங்காத பெண்ணொருத்தியிடம்
எதை ரசித்துவிடப்போகிறது
இந்தக்காதல்.
இதயமெங்கும் பொங்கும் அன்பையும்
குறைகளோடு நேசிக்கும் பக்குவத்தையும்
அழுக்கையும் அயர்ச்சியையும்
அரவணைக்கும் பாங்கினையும்
துயருறும் பொழுதில் தோள்சாய்க்கும் கனிவையும்
கோபத்தில் ஒளிந்திருக்கும் குணத்தைத் தேடுவதிலுமன்றி
வேறெங்கே உறைந்திருக்கும் இந்தக்காதல்?

No comments:

Post a Comment