இலக்கறியாத பயணமல்ல.
இடைமறிக்கும் தடைகள் பல.
கற்களும் முட்களும் கடந்து
கவனமாய்ப் பள்ளங்கள் தாண்டி.
குனிந்து நோக்க
காலடியில் பாதாளம்
கண்ணுக்கெட்டிய தொலைவில்
என் இலக்கின் உச்சி.
பெரும்பள்ளம் தாண்டும்
வலிமையுண்டு மனதில்.
சோர்ந்து துவண்ட பாதத்தை
சிலிர்த்தெழச் செய்கிறேன்.
எரிதழல் ஏந்துகிறேன் நெஞ்சில்.
கசியும் குருதி சுவடாய்ப் பதிந்து
பாதையை அடையாளங்காட்டும்.
பின்தொடர்ந்துவரும் எம்மக்கட்கு
பயணங்கள் இனிதாகட்டும்.