Sunday 30 December 2018

வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் போர்வெல்ஸ் நிறுவனத்திலிருந்து வந்து ஆழ்துளைக் குழாய்க் கிணறு அமைக்கும் பணி நடந்து கொண்டி இக்ருந்தது.

சேறும் ஈரமும் அப்பிக்கிடந்த உடலோடு தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் இருந்தனர்.

இனி இந்தக் கோவிலின் நீர்த்தேவை இதிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரால் தீரும்.

ஆக,  இவ்வாலயத்தின் மடி, சுத்தம் ஆச்சாரம் எல்லாம் பேணப்படுவதே கருவறைக்குள் அண்டவிடாத எம் மக்களின் வியர்வையால் தான்.

வேலை முடிந்ததும் அந்தத் குழாய்க்கும் ஒரு பூசை செஞ்சாலும் செய்வாங்க. ஆனாலும் நித்தம் நனைக்கும் அந்த ஈரம் எம் சகோதரனின் ஈகை அல்லவா?

No comments:

Post a Comment