Sunday 30 December 2018

ஒற்றைத் தேநீர் அருந்தும்
காலம் மட்டுமே
வார்த்தைகளற்ற நம் பொழுதுகளுக்குப் போதுமானதாக இருக்கிறது.
இதழ் பொறுக்காத சூட்டில்
கிடைத்த தேநீர்
ஏற்கிற சூட்டுக்கு இளகும் வரை
உரையாடும் மௌனத்தின் சாட்சிதானே
சிந்திய தேநீரில்
உன் விரலெழுதிய என் பெயராய்
மேசைமேல் காய்ந்துகிடக்கிறது 💜

No comments:

Post a Comment