Saturday 29 August 2020

அன்னப்பறவையென
காற்றை இங்கேயும்
மழையை அங்கேயும்
பிரித்துத் தந்தது வானம்
மழை சுமந்த மேகமென 
விழி நிறைகிறேன்
உனைப் பிரியும் பொழுதுகளில் 🖤
வறண்டு போன நினைவுகளை உயிர்ப்பிக்கும்
அடிமனசின்
ஈரம் உலராத உயிரின் பிசுபிசுப்பு 🖤
வார்த்தைகள் பிடுங்கப்பட்ட
பெண்ணொருத்தியின் மௌனம்
தீயை உமிழ்கிறது 🔥🔥
வாழ்வையும் மரணத்தையும்
மூடிய இரு கரங்களுக்குள் எடுத்துச்செல்கிறேன்.
எந்தக்கரம் திறந்து ஏற்றுக்கொள்ளப்போகிறதோ
இன்றைப் பொழுது?!?!
லேட்டாகும்
என்ற ஒற்றைச் சொல்லில்
அவர்களுக்கு
முடிந்துவிடுவது போல்
அத்தனை எளிதில்லை பெண்ணுக்கு.
"சுண்டல் செய்து வச்சிருக்கேன்
காபி டிகாக்ஷன் தயாரா இருக்கு.
இரவுக்குக்கூட மாவிருக்கு.
முடிஞ்ச உடனே வந்துடுவேன்"
இப்படி 
அடுக்கடுக்காய்
சமாதானங்களை முன்வைத்தாலும்
மச மசன்னு நிக்காம
சீக்கிரம் வந்து சேரும் வழியப்பாரு
என்ற 
எச்சரிக்கையோடுதான்
எங்கள் ஒரு மணிநேரத் தாமதம் கூட.
உன்னைக் கண்டதும்
எனக்குள் பொதிந்திருந்த
உனக்கான சொற்கள் வெளிவருகின்றன
பெருமழைக்குப் பின் 
மண்கீறி
வெளிவரும் தளிர் போல.



பெருமழையொன்று
கடத்திச்செல்லும் வெம்மையைப்போல
உன் நினைவில் கடந்துசெல்கின்றது மனமெங்கும் நிறைந்து வழிந்த
ஆற்றாமை 🖤

Tuesday 25 August 2020

மருதாணிச் சொப்பென 
மனம் பூசிக்கொள்ளும்
பால்யத்தின் நினைவுகள் 
ஆழம் பொறுத்து
சிவப்பும் வெளிர் சிவப்புமாய்..

Monday 3 August 2020

குரல் கேட்டதும்
விழி கசிவது
நியூட்டனின் விதியா?🖤

Saturday 1 August 2020

உன் சாயலில்
ஒரு நதி பார்த்தேன்
ஒரு கடல் பார்த்தேன்
ஒரு மழை பார்த்தேன்
கண்ணாடியில்
என் முகம் பார்த்தேன் 💜
அடர் வனத்தின் 
மண் சுமந்த ஈரம் நானாக
நீயாகிறாய் பசுந்தளிரின் நிறமாய் 💚
எதையும் தீண்டவில்லை
கண்கொண்டு வெளிச்சம் பார்க்கவில்லை
செவிமடல்களைச் சேரவில்லை ஒலிகள் ஏதும்
உட்செல்லவில்லை உணவும் கூட
உயிருக்குள்
ஊடுருவி உறவாடுது 
உன் நினைவுகள் மட்டுமே 🖤