வீடு நுழைந்ததும் கழற்றியெறிகிறேன்
ஒவ்வொன்றாய்.
காலையில் வாசலில் கால்வைத்ததும்
ஒட்டிக்கொண்ட முதல்பார்வையை.
வாகனம் ஓட்டிச் செல்லுகையில்
இடதுபக்கமிருந்து படிந்த
இன்னொரு பார்வையை.
அலுவலகத்தில்
வந்துபோன வாடிக்கையாளரின்
வக்கிரப் பார்வையை.
திரும்பி வருகையில்
தினந்தோறும் சந்திக்கும்
தினுசான பார்வைகளை.
முச்சந்தியில் முறைப்பதுபோலும்
வெறித்த பார்வைகளை.
இப்படி கையில்
முகத்தில்
முதுகில்
என
உடலெங்கும்
ஒட்டிக்கொண்ட பார்வைகளைப்
பிய்த்தெறிந்தேன்.
ஆனால்
காலையில் கிளம்பும் வேளை
வீட்டிலேயே ஒட்டிக்கொண்ட
கண்காணிப்புப் பார்வையைக்
கழற்றியெறியவே முடியவில்லை
கடைசிவரை.
15/10/2016
Saturday, 15 October 2016
பார்வைகள்
Wednesday, 12 October 2016
அவசர சமையல் அறிவது அவசியம்
ரசம்
ரசமில்லா
நவரசமில்லா வாழ்க்கையில் ஏது இனிமை?
பேச்சிலர் ரசம் வைப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
5 நிமிடம்தான்.
மிக்சியில் ஒரு எலுமிச்சையளவு புளியை உருட்டாம பிச்சி பிச்சிப் போட்டு, மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் போட்டு, லேசா ரெண்டு ரவுண்டு ஓட்டி, பின் பூண்டு 4 பல், வரமிளகாய் 2 தக்காளி ரெண்டு (கட் பண்ணி) போட்டு ரெண்டு ரவுண்டு ஓடவிடுங்க. அவ்வளவுதான். மிக்சியில் அரைச்ச விழுதை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் விட்டு கொதிக்கவச்சு தாளிச்சா ரசம் ரெடிங்க.
மல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்குங்க.
மறக்காம உப்பு சேருங்க.
புளி ஊறவைக்கக்கூட நேரமில்லாத சமயத்தில் இது எளிமையான முறை.
Subscribe to:
Posts (Atom)