Wednesday 31 May 2017

பெண்ணென்னும் குளிர்நெருப்பு

புவிக்கு ஆதாரம் அவளே.
பொறுமையில் பூமாதேவி
யெனச் சொல்லிப் பொத்திவைத்தார்.
சிறுதுளை வெளிச்சம் போதுமவளுக்கு.
சீறிப்பாய்ந்திடும் திறன்கொண்டவள்தான்.
பெரியாரும்
காந்தியும்
பாரதியும்
பாவேந்தனும்
விரல்பிடித்து அழைத்து வந்தனர் அவளை.
நாகம்மை
மணியம்மை
மணலூர் மணியம்மா
ராமாமிருதம் அம்மை
லீலாவதியாய்
போராட்டங்கள் வென்று காலூன்றினாள்.
அம்பையாய்
இளம்பிறையாய்
இலக்கியம் பூண்டாள்.
வர்த்தினியாய் அன்பை விதைக்கிறாள்.
கலையாய்
அவர்களின் அடியொற்றி
முன்செல்ல விழைகிறாள்.
யாதுமவளே.
ஞாலத்தில் இனி அவளைப்
பூட்டிவைப்பவர் இல்லை எவரும்.
அன்பெனும் கண்கொண்டு
அகிலம் நோக்கும் அவளோடு
கரம்கோருங்கள்.
கனவுகளில் மட்டுமே
சிரிக்கும் அவளை சேர்த்தணைத்து
சகமனிதியாய் தோள்கொடுங்கள்.
வானம் வசப்படும்
அவளுக்கும்
அனைவருக்கும்.
ஏனெனில்
பெண்ணின்றி அமையாது இவ்வுலகு.
------------------------------------------------------

சர்வதேச மகளிர்தின புரட்சிகர நல்வாழ்த்துகள்,
என்னொத்த மகளிர்க்கும்
தோள்கொடுக்கும் அன்புநிறைத் தோழர்கட்கும்.

08/03/2017
------------------------------------------------------

No comments:

Post a Comment