Saturday 6 May 2017

புலியொன்றைப் புறந்தள்ளி
சிறுத்தையின் வால்பிடித்து வீசியெறிந்து
குரங்கின் கழுத்தை நெரித்து
கரடியின் காதினைக் கிள்ளியவாறே
உறங்கிக்கொண்டிருக்கிறான்
வீரமகன் வெற்றிமாறன்.
விலங்குகளனைத்தும்
சுற்றிக் காவல் நிற்க
ஐவருக்குமாய் பால் குவளையை
நிரப்புகிறேன் நான்.

3/4/17

No comments:

Post a Comment