Sunday 7 May 2017


முன்பின்நவீனத்துவம்
எதுவாயிருந்தாலென்ன.
சில பல வளைவுகளும்
மூன்றே புள்ளிகளும் போதுமென நினைக்கிறான்
பெண்ணை வரையும் ஓவியன்.
ன் விகுதியால்
ஆணெனக் கருதிக்கொள்ளலாம்
அவ்வோவியனை.
நவீன பெண் ஓவியர்களும்
வெற்று நேர்க்கோடுகளில்
ஆண் உருவம் வரையலாம்தான்.
பெண்ணால் இயலுவதில்லை அது.
ஏனெனில்
பெண்ணின் பார்வையில்
ஆண் ஒரு உயிர்.
பொருளல்ல போகிக்க.

No comments:

Post a Comment