Tuesday 23 May 2017

ஆமைபோல் ஒடுங்கு

உள்ளே இரு

பத்திரமாய் இரு

கவனமாயிரு

எச்சரிக்கையாய் இரு

எட்டிப்பார்க்காதே

முகம் காட்டாதே

சிரித்து சிலிர்க்காதே

உரத்துப் பேசாதே

கோபம் கொள்ளாதே

குரலுயர்த்தாதே

அடங்கிக்கிட

சுண்டுவிரல் தெரிய உடையணியாதே

இழுத்து மூடு உடலை...

இளமை ததும்பும் பருவப்பெண்ணுக்குச் சொல்லவில்லை இதெல்லாம்...

பால்குடிக்கும் பச்சிளம் பெண்சிசுக்களுக்கே சொல்கிறேன் இன்று.

No comments:

Post a Comment