Friday 2 June 2017

90

அன்று
உண்ணாவிரதப் போராட்டம் என்னும் அகிம்சையைக் கடைப்பிடித்த காந்தியை சுட்டுக்கொன்றோம்.

நேற்று
வாழ்நாளெல்லாம் நம் உயர்வுக்கெனத் தம்மை அர்ப்பணித்த பெரியாரை செருப்பால் அடிக்கும் செருக்கு கொண்டோம்.

இன்று
இரோம் ஷர்மிளாவை வாக்கு எண்ணிக்கையால் வீழ்த்தினோம்.

போராட்டங்கள் முடிவதுமில்லை.
போராளிகள் ஓய்வதுமில்லை.

வாக்காளர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருக்க

வேட்பாளர்கள் வாக்குகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

தனக்கான ஆதரவை 1,2,3 என எண்ணிக்கொண்டே வந்து 90 க்கு மேல் எண்ண ஆளில்லாமல் முடிக்கிறது சனநாயகம்.

11/03/2017

No comments:

Post a Comment