Sunday 14 May 2017

விழித்திருக்கும் பொழுதில்
நினைவுகளால் நிறைக்கிறாய்.
பிரிந்திருக்கும் கணங்களில்
துயரங்களால் நனைக்கிறாய்.
சேர்ந்திருக்கும் பொழுதினை
மௌனங்களால் கரைக்கிறாய்.
இமைசேர விடாமல் இரவுகளில்
கனவுகளால் துளைக்கிறாய்
நினைத்திருக்கும் பொழுதுகளில்...
நானாகவே இருக்கிறாய்.

No comments:

Post a Comment