Friday 2 June 2017

வர்லாம் வர்லாம் வா...

செவியில் விழும் சலசலப்புகள்
ஆனந்த தாண்டவமாயிருக்கலாம்.
தூரத்தில் தெரியும் கூட்டம்
திருவிழாத் திரளாக வாய்ப்புண்டு.
கருமேகங்கள் மேலும் அடர்ந்தாலும்
வெள்ளாமைக்கான பெருமழையே.
இதயம் லேசாக்கி
மென்புன்னகை முகத்தில் தேக்கு.
எரிமலை நெருப்பில்
இரவுணவு சமைக்கலாம் வா.

No comments:

Post a Comment