Friday 2 June 2017

வெற்றுக்கோப்பையில்
நீர் நிரப்பி அருந்தலாம்.
பசும்பால் நிரப்பிச் சுவைக்கலாம்.
ஆவி பறக்கும் தேநீரோடு
அளவளாவும் நட்பிருந்தால்
அழகான மாலைப்பொழுதை
அர்த்தமுள்ளதாக்கலாம்.
நஞ்சினை நிரப்பி
கசப்பினை அருந்தி
தேமதுரச் சுவையெனச் சிலாகித்து மகிழுவதேன் கவிஞர்களே?
இழப்பு உங்கள் உறவுகளுக்கு மட்டுமல்ல
கவியுலகுக்கும் தானே.

க.சீ.சிவகுமாரின் மறைவு தந்த வலியில்.

No comments:

Post a Comment