Tuesday 16 February 2016

பற்றுதல்...

ஒவ்வொருவர்க்கும்
பற்றிக்கொள்ள ஏதோவொன்று கிடைக்கத்தான் செய்கிறது.
பொழுதுகள் தள்ள எதையாவது பற்றிக்கொள்ளல் நலம்.
அதிகாலை விழிக்கையில்
அதுவாய் வந்து பற்றும்
முந்தைய நள்ளிரவில் கேட்ட
ஸ்வர்ணலதாவின் எவனோ ஒருவன்...
யாருமற்ற வேளை
சமையலறையில் எழும்பும்
குக்கரின் விசில் எண்ணிக்கை...
மதிய பொழுதுகளில்
எங்கோ யார் வீட்டிலோ ஓடும்
கிரைண்டர் ஓசை...
அயர்ந்து பின் விழிக்கும் தருணம்
பக்கத்து வீட்டில் ஒலிக்கும் அழைப்புமணி ஒலி...
இப்படி பற்றிக்கொள்ள
எத்தனையோ இருக்க
எப்போதும் மௌனத்தைப் பற்றுதல் அவசியமாய் இருக்கிறது
வாழ்வின் பெரும்பகுதி கடக்க.

No comments:

Post a Comment