Monday 15 February 2016

என் பிரியசகாவே!

கரங்கள் கோர்க்கும்வேளை
லேசாய் விரல் நெறிக்கும் உன் பிரியம்.
வலிக்காதென்பதறிந்தே
வலிக்கிறதா என வினவும் குறும்பு.
என் விழி தாழ வைக்கும் முயற்சியாய்
குறுகுறு என முகம் நோக்கும் விஷமம்.
நாணம் தேடும் முகத்தான்
படக்கென்று கண்ணடித்து
நாக்கை உள்மடித்து
நீ  என் ஆளெனக் காட்டத் துடிக்கும்
அன்பான ஆளுமை
.
.
.
இன்னும்
இன்னும்
ஏதேதோ  உன் அதீத அன்பைக்கூறும் தன்முயற்சிகள்
தன் வெற்றிதனை அறியாது
விக்கிரமனாய்
என் எதிரே நீ.

No comments:

Post a Comment