Friday 5 February 2016

வழி பார்த்து, விழி வைத்து...

கிளம்பட்டுமா
என்று வினவிப்
புறப்படும்போதெல்லாம்
ஒரு புன்னகையை மட்டும் கொடுத்துவிட்டு
ஒட்டுமொத்தமாய்
உயிரை அள்ளிச் செல்கிறாய்.
உயிரற்ற உடலோடு தலையசைக்கையில்
உன் புன்னகையின் சக்தியில்
கொஞ்சமாய் உயிர் ஒட்டிக்கொள்கிறது.
மீண்டும் நீ திரும்பிவரும் நாள் பார்த்து
ஊசலாடும் உயிரோடு காத்திருத்தல்
இயல்பாகிப் போனது.

No comments:

Post a Comment