Tuesday 16 February 2016

அம்மா, அன்னை தெரியும். மாதா தெரியுங்களா?

மாலை அலுவலகம் விட்டு வெளிவர இயலவில்லை. சாலையில் போக்குவரத்து நெரிசல். சிலநேரம் முடங்கியும் போனது. ஆட்டோக்களை நிற்கவிடவில்லை காவல்துறை. காக்கிச்சட்டையைக் கண்டதும் அவர்களும் நிற்கவில்லை. நின்ற ஒருவரும் எப்போதும் நூற்றுப்பத்து ரூபாய் (அதுவே கொள்ளை தான்) கொடுக்கும் தூரத்துக்கு இருநூறு ரூபாய் கட்டடணம் கேட்டார். பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களும், அலுவலகம் முடிந்து செல்வோரும் பணிமுடிந்து திரும்பும் இதரரும் ஒருவித பீதியோடு போக்குவரத்தைப் பார்த்தபடி பேருந்து கிடைக்காமலும் ஆங்காங்கே தேங்கி நின்றனர்.
அப்படி என்ன நிகழ்வு?
ஏதும் மக்கள்நலத்திட்ட முகாமா?
அரசு விழாவா? சமூகநலப் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வா? ஏதும் நிவாரணப் பணியா?
-----------------------------
-----------------------------
தேசியக்கல்லூரி வளாகமே நிரம்பிவழியக் காரணமென்ன?
-----------------------------
-----------------------------
நான்கு நாட்கள் நடக்கவிருக்கும் அதிமுக்கிய நிகழ்ச்சி தான் என்ன?
-----------------------------
-----------------------------
ம்ம்ம்! அது வந்து...
            அது வந்து...
-----------------------------
------ மாதா வர்றாங்களாம்
------ யாரு?
------ அம்மா, அன்னை தெரியும்.
------ இது யாரு மம்மி சாரி மாதா?
------ இவங்க
             மாதா அமிர்தானந்த மயி
             ரொம்ப சக்தி வாய்ந்தவங்க
              .
              .
              .
              வெளங்கிடும்...


No comments:

Post a Comment