Friday 29 June 2018

நேற்றைய மாலை வெளிச்சமாய்த்தானிருந்தது
விளக்கொன்றும் ஏற்றவில்லை
பின்னைப்பொழுதில்
இருளின் விரல்கள் தீண்டத்துவங்கிய கணத்தில்
விளக்கினை ஏற்றித்திரியைத் தூண்டினேன்
நிறைந்த ஒளிவெள்ளத்தில்
நிழலெனச் சரிபாதி இருள் சூழ்ந்தது
விளக்கினை அணைக்காமல்
இருள் விரட்டத் தலைப்பட்டேன்
ஒளிப்பிரவாகம் எங்கும் வியாபித்த பொழுதில்
நித்திரை வந்து சுமையென அழுத்த
இமைமூடிய கணமொன்றில்
இருள் என் கண்களுக்குள் ஒளிர்ந்தது.

No comments:

Post a Comment