Wednesday 4 May 2016

முடிவில்லாப் பயணமாய்...

வழியனுப்பத்தான் வந்தேனா?
நின் வழித்துணையாய் 
பயணத்தில் வரும் ஆசை கொண்டேனா?
விழி விரிய ஆவல் கண்டேன்
உன்னிடத்தில்.
விழிநிறைத்த நீர் மறைக்க
கையசைத்து விடைபெற்ற பொழுதில்
மனமென்னவோ உன்னைத் தொடர்ந்தது.
வழிப்போக்கனாய் வந்தவனில்லை
என் வாழ்வில் நீ
என்றுணர்த்தியது
நம் முந்தைய ரயில் பயணம்.
அன்று
கடைசி நிறுத்தத்தில்
இறங்கிய நாம்
மீண்டும்
தொடங்க ஒரு ஒத்திகை தானின்று.
வழிகாட்டி முன்செல்லும்
நட்பின் விரல் பிடித்துப் 

பின்தொடர்வேன் என்றென்றும்.

No comments:

Post a Comment