Wednesday 16 March 2016

புத்தன் கணக்கு

சாவறியா வீட்டில்
கடுகு வாங்கி வரச்சொன்ன
புத்தனின் கணக்கில்
என் வீடும் இருந்தது.
இதையறியாதவளாய்
இருந்திருந்தபோதுதான்
அழைப்புமணியொலிக்க
ஆங்கே ஓர் யுவதி நின்றிருந்தாள்.
மடியேந்திப் பிச்சைகேட்டாள்.
என்ன உன் தேவையென்றேன்
புத்தன் கேட்ட கடுகென்றாள்.
வீடெங்கும் தேடித்தேடிப் பின்
வாசல் விரைந்தேன்.
வந்திருந்த தோழியோடு
மடியேந்தி நின்றேன்  
மற்றோர் வாசலில்.

                                 17/3/16

No comments:

Post a Comment