விரைந்தே முடிக்கின்றேன் வேலைகளை.
நடையைக் கொஞ்சம் எட்டிப்போட்டு
வீடுபோய்ச் சேர நினைக்கிறேன் விரைவாய்.
நேற்று அவள் வரவில்லை.
நான் போவதற்குள் சென்றுவிட்டாளோ?
இன்றேனும் பார்த்துவிடவேண்டும்.
கடைசியாய்ப் பார்த்ததெப்போது?
கடைசி நாளன்று தானே.
நினைவோட்டம் சுழன்றாலும்
நடைவேகம் குறையவில்லை.
வீட்டின் கதவைத் திறக்கின்றேன்.
யாருமற்ற வீடு.
எங்கேனும் எங்கேனும் அவள் வந்த சுவடு இருக்கிறதா?
வேறு எவர் வருகைக்கும் முன்பாக
வந்துவிடமாட்டாளா அவள்?
எனக்கும் அவளுக்குமான பேச்சுகள் எத்தனை
இன்னும் பேசப்படாமலே.
வீடெங்கும் தேடிச் சோர்ந்தபின்னரே உறைக்கிறது புத்தியில்
வீடே அவள்தானே.
தாயாய் மடியில் அவளை ஏந்தாமல்
அவள் மடியில் தவழ்கிறேனே நான்?
விசித்திரமான வேதனை இது.
வேறொன்றும் கேட்பதற்கில்லயம்மா.
அடி யாழினி!
நீ வந்ததும் சென்றதும் ஏன்?
Wednesday 16 March 2016
ஏனம்மா? ஏன்?
Location:
Woraiyur, Woraiyur
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment