Saturday 2 January 2016

நட்பூ மலர..

Bஒவ்வொரு நாளும் விழிக்கும்போது
உனக்குள் புன்னகை செய்துகொள்.
எதிர்ப்படும் முதல் முகத்தைப் பார்த்து
இலேசாய் இதழ் விரித்திடு.
சிற்றுண்டி பரிமாறும்வேளை
சிறிது சிரிப்பையும் சேர்த்தே பரிமாறு.
வேலைப்பளுவில் இடுப்பொடியும் நேரம்
தேநீர் தரும் சிறுவனைப்பார்த்து
சிறிதே சிரித்து நன்றி சொல்.
காணும் மனிதரிடம் புன்னகை செய்.
காலமெல்லாம் சிரிப்பு நம் சொந்தமாயிருக்கும்.
ஒரு புன்னகையை மட்டும் விலையெனக் கொடுத்து
உலகையே உனதாக்கிக்கொள்.
நட்டம் ஒன்றும் யாருக்குமில்லை.
மாறாய்
கொடுப்பவர்க்கும் பெறுபவருக்கும்
கிடைக்கும் ஒரு நட்பூ.

                                   3/1/2016

No comments:

Post a Comment