உன் பிரியத்தின் வாசலில் நிற்கிறேன் கரங்கள் ஏந்தி.
மொத்தத்தையும் தருகிறாய்
இதயம் திறந்து.
செய்வதறியாமல் திகைக்கிறேன்
கோடையின் வெம்மை தணிக்கும்
ஒரு குவளை நீராய் என்
உயிரை நனைக்கிறாய் தோழா.
Wednesday, 27 April 2016
கோடைமழை
Monday, 21 March 2016
Wednesday, 16 March 2016
புத்தன் கணக்கு
சாவறியா வீட்டில்
கடுகு வாங்கி வரச்சொன்ன
புத்தனின் கணக்கில்
என் வீடும் இருந்தது.
இதையறியாதவளாய்
இருந்திருந்தபோதுதான்
அழைப்புமணியொலிக்க
ஆங்கே ஓர் யுவதி நின்றிருந்தாள்.
மடியேந்திப் பிச்சைகேட்டாள்.
என்ன உன் தேவையென்றேன்
புத்தன் கேட்ட கடுகென்றாள்.
வீடெங்கும் தேடித்தேடிப் பின்
வாசல் விரைந்தேன்.
வந்திருந்த தோழியோடு
மடியேந்தி நின்றேன்
மற்றோர் வாசலில்.
17/3/16
ஏனம்மா? ஏன்?
விரைந்தே முடிக்கின்றேன் வேலைகளை.
நடையைக் கொஞ்சம் எட்டிப்போட்டு
வீடுபோய்ச் சேர நினைக்கிறேன் விரைவாய்.
நேற்று அவள் வரவில்லை.
நான் போவதற்குள் சென்றுவிட்டாளோ?
இன்றேனும் பார்த்துவிடவேண்டும்.
கடைசியாய்ப் பார்த்ததெப்போது?
கடைசி நாளன்று தானே.
நினைவோட்டம் சுழன்றாலும்
நடைவேகம் குறையவில்லை.
வீட்டின் கதவைத் திறக்கின்றேன்.
யாருமற்ற வீடு.
எங்கேனும் எங்கேனும் அவள் வந்த சுவடு இருக்கிறதா?
வேறு எவர் வருகைக்கும் முன்பாக
வந்துவிடமாட்டாளா அவள்?
எனக்கும் அவளுக்குமான பேச்சுகள் எத்தனை
இன்னும் பேசப்படாமலே.
வீடெங்கும் தேடிச் சோர்ந்தபின்னரே உறைக்கிறது புத்தியில்
வீடே அவள்தானே.
தாயாய் மடியில் அவளை ஏந்தாமல்
அவள் மடியில் தவழ்கிறேனே நான்?
விசித்திரமான வேதனை இது.
வேறொன்றும் கேட்பதற்கில்லயம்மா.
அடி யாழினி!
நீ வந்ததும் சென்றதும் ஏன்?
Thursday, 10 March 2016
உயிர்ப்பேன்
விரல்களில் வழிந்துவிழும் வார்த்தைகள் கவிதைகளாய்
உனக்கு மட்டும் எப்போதும்.
அடுத்து வரிசையில் நான்
உன் விரல்வழிப் பாதை மீண்டு
கவிதையாய் உருப்பெற.