Thursday 1 July 2021

வார்த்தைகளை வரிசைப்படுத்துகிறேன்
பார்வையின் அனலில்
உருகிச் சிவக்கின்றன
வரிசை கலைந்து
சரிந்து விழுவனவற்றை
மேலொன்றாக அடுக்குகிறேன்
மெய்ப்புள்ளிகளின் கனம் தாளாது
நொறுங்கிச் சிதைகின்றன
வார்த்தைகளைப் பிரித்தெடுத்து
பத்திரப்படுத்தி
வைக்கிறேன்
என்
மௌனத்தின் பெட்டகமது
நிறைந்து வழிகிறது
இதுவரை மொழிந்திராத இவ்வார்த்தைகளின்
கனம் தாங்கி
பொருளுணரும்
உயிரொன்றிடம் சேர்ப்பிக்கும்
காலம் வரை
மௌனத்தை சுமந்து திரிவேன் 🖤

No comments:

Post a Comment