Sunday 18 October 2020

உணர்வுகள் அழுத்த உறைந்திருக்கிறேன்.
முன்னதாக
ஒரு சோகம் எனைக் கவ்வியது.
மெல்ல மெல்ல உள்நுழைந்து
உயிரைத் தொட்டது.
தொடுதலின் முதல் கணத்தில்
மென்வலியொன்று ஊடுருவ
தரை சிந்திய நீர் விரவுதல் போல
மனமெங்கும் வியாபித்து
அடுத்தடுத்த கணங்களில்
பெருவலியாய் உருமாறி
உயிரெங்கும் நிறைந்து வழிய..
வலியைப் பருகிச் சுவைக்கின்றேன்.
சுவைத்துப் பருகுகின்றேன்.
தீராவலியொன்றைம் தேடத் துவங்குகிறேன்.
எங்கெங்கு வலியுளதோ
அங்கங்கு உறைகிறேன்.
வலியின் சுவையுணரா மனங்களை
எண்ணி நகைத்தே
மேலும் கொஞ்சம் வலியை தேடி
உணர்வுகள் அழுத்த
உறைந்திருக்கிறேன்

No comments:

Post a Comment