Tuesday 3 July 2018

அந்த மரத்தினடியில் அமர்ந்திருந்தேன்
பறவையொன்று இறங்கிவந்து
சிறகுகளைத் தந்தது
உறங்கிவரும்வரை வைத்துக்கொள் என்றது
உறங்கிவிழித்து வந்த பறவை
எங்கே சென்றாய் என் சிறகு விரித்து என்று வினவியபோது
எங்குமில்லையென்றே
மடியிலிருந்த சிறகை நீட்டினேன்
சிறகிருந்தென்ன
பறக்கத்தெரியாதவளுக்கு
காற்றில் கரைந்தது பறவையின் குரல்.

No comments:

Post a Comment