Sunday 22 July 2018

ஆதி ஆப்பிள் புளிப்பென்று
அகலுகிறாள் கரம் உதறி
உவர்ப்பும் இனிப்பும் கொண்ட
தேனைத் தரும்
பூவொன்றைத் தேடி
செடிகள் தோறும் துழாவி
வெண்ணிறத்தொரு தும்பைப்பூவின்
நுண்துளை தள்ளிய கள்ளுண்ண
பட்டாம்பூச்சியாகும் உபாயமறியாது
முகம் சுணங்கிப் போகிறாள்
வாடிய வதனத்தின்மீது
வானுலவும் மஞ்சுதிர்த்த
ஒருதுளி நீர் பட்டு
உயிர் மலர்ந்த கணமொன்றின்பின்
வான்மழையின் காதலியாய்
முகடுகளில் சுற்றித் திரிபவளைக்
கண்டால் உரைத்திடுங்கள்
புளிப்பும் சிவப்புமற்ற
பச்சைநிற ஆப்பிளொன்று
நலம் உசாவிச் சென்றதென.

No comments:

Post a Comment