Sunday 22 July 2018

சென்ற முறை பார்த்த
கடலொன்றைப் பார்த்தேன்
கால் நனைத்த அலையினில்
பழகிய சாயல்
ஈரம் கூட அவ்வாறே
இதயம் வரை வருடிற்று
அலை காலடி மணல் பறித்தபின்
சென்ற முறை போலவே
சறுக்கி விழுந்தேன்
இம்முறை
சிரித்தபடி எழுந்தேன்

No comments:

Post a Comment