Wednesday, 9 November 2022
Saturday, 24 September 2022
காலையில் இருந்து அழைப்புகள் ஏற்கப்படாமல் இருக்கின்றன
அண்மையில் பிறந்த பூனைக்குட்டியென கண் திறவாமல் கிடக்கிறேன்
யாரோ தேடியிருக்கிறார்கள்
யாரோ வருவதற்கு இருக்கிறார்கள்
யாரோ விட்டுச் செல்ல விழைகிறார்கள்
எந்தத் தகவலையும் ஏற்க இயலா மனநிலை
பல்லாங்குழிச் சோழிகளென
தொண்டைக்குழியில் நெருடுகின்றன
வண்ண வண்ண மாத்திரைகள்
திறவாத இமைகளை இன்னும் இறுக மூடிக் கொள்கிறேன்
அன்பின் நிமித்தம் யார் வந்தாலும்
வலி குடையும் என் கால் பாதங்களை
போர்வையால் மூடிவிட்டுச் செல்லுங்கள்
நம் இத்தனை நாள் பழக்கத்திற்கு இந்தச் சகாயம் போதுமெனக்கு
Tuesday, 14 June 2022
Sunday, 1 May 2022
ஆளசிந்தையில் யாதொரு தெளிவுமில்லை
ஏதுமற்றவன் பாடுகள் குறித்த அக்கறையில்லை
எல்லாமிருப்பவனிடம் அவனுக்கு சொல்வதற்கேதுமில்லை
அரிதாரம் பூசி
அரியணை ஏறிய நாள்முதலாய்
கஞ்சிக்குத் தவிப்பவனின்
கழனியில் நிற்பவனின்
சாய்க்கடை மலத்திலுழல்பவனின்
மதச்சார்புகள் அற்றவனின்
குரல்களேதும் அவன்காதில் விழவில்லை
நித்தமொரு ஊர்வலம்
உலகம் சுற்றும் வாலிபனாய்
ஒய்யார உடையணிந்து தர்பார்கள் நிகழ்த்துவதோ வாய்ச்சவடாலில்.
மானுட தர்மங்கள் யாவும் மாறி
மாட்டுக்கொரு நீதி
மனிதருக்கொரு நீதி
மனிதரிலும் சிலருக்கோ அநீதியென்றே
மனுதர்ம சாத்திரங்களாயின.
மனுவும் சாணக்கியனும் நாவில் நடமாட சொற்பொழிவுகளின் தரவுக்கோ புராண ஏடுகள்தானே.
எதையேனும் சொல்லி
எதையெதையோ புளுகி
வரலாற்றின் ஏட்டைத் திரிப்பதற்குக்
#குறிப்புகள்_ஏதும்_தேவையா?
சொல்லுங்கள்.
Subscribe to:
Posts (Atom)