எழுதலாமென்று எண்ணியவேளை
எழுதுகோலைப் பறித்துச் சென்றான் சாத்தான்.
கடவுளிடம் முறையிடச் சென்றேன்
அவனோ வார்த்தைகளைப் பறித்துக்கொண்டான்.
Sunday, 14 April 2019
Friday, 12 April 2019
கருவறைக் கதவு பூட்டப்பட்டபின்
தெய்வம் இளைப்பாற நினைத்தது
நாளெல்லாம் நின்றபடி
காட்சி தந்த அசதியில்.
மீண்டும் காலை பூட்டுத் திறக்கும்வரை
ஆயாசமாய்ச் சுவரில் சாயந்து கால்நீட்ட
எத்தனித்ததொரு கணத்தில்
பாரத்மாதாகி ஜே என்ற முழக்கம் செவியில் அறைந்தது.
நாக்கைத் துருத்தி
நான்கு கைகள் அணிந்து
எழுந்து நின்ற தெய்வம்
பதறித் துடித்தபடி
கலைந்த உடையைத் திருத்திக்
கல்லுடல் முழுதாய் மூடி
காட்சிதரத் துவங்கியது
Monday, 25 March 2019
Monday, 11 February 2019
Subscribe to:
Posts (Atom)