Tuesday 18 April 2023

விரட்டியடிக்க ஒரே தீர்வு
சிதைத்துச் சீரழிப்பதே என்பது அவர்கள் முடிவானது.
ஆட்சி அவர்கள் கையில்
நீதி அவர்கள் கையில்
கோவில் அவர்கள் கையில்
பூம்பிஞ்சைப் பலியிட்டனர் தெய்வத்தின் முன்னே
நித்தம் நித்தம் பலிபூசை
அவள் குருதியே குங்குமமாய்
அவள் கதறல்களே மந்திரமாய்
முனகல்களே மணியோசையாய்
வேள்வி முடித்த வெறியோடு 
வெளிவந்த பக்தர்களின் செவியில் விழுந்தது
ம்மா என்ற ஆவின் குரல்
கோமாதாவை
பக்தியோடு தொட்டு வணங்கி
வழிந்த கோமியத்தை ஏந்திக் குடித்து
ஏப்பமிட்டுச் சொன்னார்கள்
பாரத்மாதாகீ ஜே!!!

No comments:

Post a Comment