பசி குடைகிறது நொடியொன்றைச் சுவைத்துப் பார்க்கிறேன் நிமிடத்தைத் தின்று தீர்க்கிறேன் மணிநேரங்கள் உண்டு முடிக்கிறேன் மாதங்கள் ஆண்டுகளென விழுங்கியும் ஆறாப் பசியடங்க காலப் பெட்டகத்தைக் கைக்கொள்ளத் தேடுகின்றேன்
ஏதுமற்றிருக்கிறேன் நான். என் கண்ணீராய் என் புன்னகையாய் என் வாய்மொழியாய் என் மௌனமாய் யாதுமாகி நிற்கிறாய் நீ.