Wednesday 15 August 2018

மழையை
மழையென்றும் சொல்லலாம்
நீயென்றும் சொல்லலாம்.
மழையில்லா வாழ்வு
நீயில்லாப் பொழுதுபோல் கொடிது.
மழை நனைத்த மண்
உன் அண்மை போல்
குளிர்ந்தென்னை ஏந்திக்கொள்கிறது.
மழை சூடிய மரங்கள்
சாரல் சொரிந்து என்னை
சீராட்டும் வேளை
மழையில் தொலைந்த
கோடை வெம்மையென
உன்னில் என்னைத் தணிக்கிறேன்.
இப்போது
மழையென்றால் நானும்.

No comments:

Post a Comment