Wednesday, 31 May 2017

பெண்ணென்னும் குளிர்நெருப்பு

புவிக்கு ஆதாரம் அவளே.
பொறுமையில் பூமாதேவி
யெனச் சொல்லிப் பொத்திவைத்தார்.
சிறுதுளை வெளிச்சம் போதுமவளுக்கு.
சீறிப்பாய்ந்திடும் திறன்கொண்டவள்தான்.
பெரியாரும்
காந்தியும்
பாரதியும்
பாவேந்தனும்
விரல்பிடித்து அழைத்து வந்தனர் அவளை.
நாகம்மை
மணியம்மை
மணலூர் மணியம்மா
ராமாமிருதம் அம்மை
லீலாவதியாய்
போராட்டங்கள் வென்று காலூன்றினாள்.
அம்பையாய்
இளம்பிறையாய்
இலக்கியம் பூண்டாள்.
வர்த்தினியாய் அன்பை விதைக்கிறாள்.
கலையாய்
அவர்களின் அடியொற்றி
முன்செல்ல விழைகிறாள்.
யாதுமவளே.
ஞாலத்தில் இனி அவளைப்
பூட்டிவைப்பவர் இல்லை எவரும்.
அன்பெனும் கண்கொண்டு
அகிலம் நோக்கும் அவளோடு
கரம்கோருங்கள்.
கனவுகளில் மட்டுமே
சிரிக்கும் அவளை சேர்த்தணைத்து
சகமனிதியாய் தோள்கொடுங்கள்.
வானம் வசப்படும்
அவளுக்கும்
அனைவருக்கும்.
ஏனெனில்
பெண்ணின்றி அமையாது இவ்வுலகு.
------------------------------------------------------

சர்வதேச மகளிர்தின புரட்சிகர நல்வாழ்த்துகள்,
என்னொத்த மகளிர்க்கும்
தோள்கொடுக்கும் அன்புநிறைத் தோழர்கட்கும்.

08/03/2017
------------------------------------------------------

அவளும் நானும்

இன்முகம்
புன்சிரிப்பு
மென்பார்வை
பூந்தென்றல்
குளிர்சாரல்
வர்த்தினியும் நானுமாய்
பொன்மாலைப்பொழுது

Varthini Parvatha
07/03/2017

Monday, 29 May 2017

இருக்கிறோம் உயிரோடு...
வாழ்கிறோமா?

நானும் உன்னை.

தேர்வு அறையில் நான்.
தலைப்பென்னவோ
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"

தேர்வில் வெற்றியா தோல்வியா
எதுவென்பதில் அய்யமில்லை.
காதலில் வெற்றியா தோல்வியா
என்ற அச்சமுண்டு.

அழகான கையெழுத்து
கவித்துவ சொல்லாடல்
கொண்டு வென்று
வெற்றிக்கோப்பையை ஏந்தி வருகிறேன்
தோல்வியை எதிர்கொள்ளும் திராணியின்றி.

சொல்லவா நான்?
சொல்வாயா நீ?

என் நெஞ்சு துடிக்க
விழிகள் படபடக்க
கரங்கள் நடுங்க
கால்கள் துவள
வந்தடைகிறேன் உன்னை.

நெஞ்சாங்கூட்டில் உயிர்பிழைக்க
அந்த மருந்தென்னும் சொல்லைச் சொல்லிவிடு.
"நானும் உன்னை"

Thursday, 25 May 2017

21/12/2017

அடிபட்ட இடத்தில்
PAIN இருக்கா என்று கேட்டார்கள்.
இன்னும் கூடுதலாய் வலி.

#உலகத்_தாய்மொழி_தினம்_இன்று

18/02/17

எங்கள் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் ஈடு இணையற்ற தோழரும், தொழிற்சங்க வழிகாட்டியுமான தோழர். R.G. என்று அழைக்கப்படும்
தோழர். R.GOVINDARAJAN அவர்கள் மறைவுக்கு செவ்வஞ்சலி.

தோழர்.ஆர்.ஜி. அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ஒரு அன்புநிறைத் தோழராகவே உணர்ந்திருக்கிறேன். வயதில் சிறியவர்கள் தானே என்ற எண்ணமேதுமின்றி என் போன்றோரை வாங்க தோழர் என உபசரிக்கும் அவரது அன்பையும், மதித்து உரையாடும் பாங்கினையும் நம் அய்யங்களைத் தீர்க்கும் அக்கறையினையும் வியந்து நோக்கியுள்ளேன்.

ஒரு மாலையில் திருச்சி தொடர்வண்டி சந்திப்பில் அவரோடு உரையாடிய அனுபவம் மறக்கவியலாது. காணும்போதெல்லாம் தம் அனுபவஅறிவால் நம்மில் ஒன்றை நிறைத்துவிடும் கனிவு அவரிடமிருந்தது.

தொழிற்சங்கம் பற்றிய தெளிவான புரிதலை என்னுள் உருவாக்கிய தோழர். ஆர்.ஜி. அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகவே உணர்கிறேன்.

AIIEA விற்கும் அன்னாரின் மறைவு ஈடுசெய்யவியலாத ஒன்றே.

தோழருக்கு செவ்வணக்கங்கள்.

குமாரசாமிக்கு ஒரு குட்டு கூடக் கிடையாதா?
வாய்ப்பாடையாவது imposition எழுதச் சொல்லுங்க..

15/02/17