தொலைத்த என்னைத்
தேடியவிடத்தில்
கிடைத்ததுன் உயிர் 💜
Tuesday, 18 September 2018
ஈர வானத்தோடு
நனைந்த பாடலொன்றையும்
கிளையில் உலர்த்தி விட்டு
கூட்டுக்குள் நுழைந்தது தூக்கணாங்குருவி
Sunday, 9 September 2018
சுர வேகத்தில்
கழுத்தோடு மாலை கோர்க்கும் குழந்தையின் அருகாமையில் அடைகாக்கப்படும் உணர்வு அம்மாவுக்கு.
எப்போதும் தனித்திருப்பதேயில்லை.
உன் சொல்லொன்று செவியோரத்தில்.
உன் பார்வையொன்று
விழியோரத்தில்.
உன் விரலொன்று பிணைத்தபடி.
உன் கோபமொன்றில் அஞ்சியபடி
உன் தொடுகையில் கரைந்தபடி
உன் அழுகையில் கலங்கியபடி.
எப்போதும் எப்போதும்.
தனித்திருப்பதேயில்லை
ஒருபோதும்.
Wednesday, 5 September 2018
அன்பெனும் ஆழிப்பேரலையில் மூழ்கித் தவிக்கிறேன்
சிப்பிகள் காலில் இடற
இருகை கொண்டு சேகரம் செய்கிறேன்
முத்தினை மறந்து.
மூழ்கியபின் முத்தென்ன சிப்பியென்ன
கடலலையின் தாலாட்டில்
கண்மயங்கிக் கிடக்கிறேன்
அலை தழுவுது உடலை அரவமென
பிரபஞ்ச வெளியின் பேரழகெல்லாம்
கடல் கொண்டது போக மீதமே.