Sunday 3 April 2022

இப்போது
நுரைத்துப் பொங்கி வழிகிற என்னுலகம்
எப்போது நிறைந்ததெனத் தெரியவில்லை
எல்லோரும் கொஞ்சமாய் 
எடுத்துக்கொண்டதாய் நினைவு
ஏதுமற்றதாய் வறண்டு கிடந்த பொழுதுகளும் உண்டு
எடுத்தவர் 
கொடுத்துச் சென்றனரா
எடுத்ததையே மீண்டும் தந்தனரா
கேள்விகள் குடையும் மனதோடு
உறைந்த நினைவுகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
நுரைத்துப் புளித்து கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது என்னுலகம் அப்போதும்.

No comments:

Post a Comment