Thursday 1 August 2019

பார்த்து நாளாச்சே
என்ற உன் வார்த்தைகள் தான் இன்றைய சந்திப்புக்கு அச்சாரம்.
அருகருகே அமர்ந்திருந்த தருணங்களில்
பயிற்சி மகளிரை வியந்தாய்
பணியாளரை விசாரித்தாய்
அன்பைப்பொழிந்தாய் அயல்மாநிலத்தவனிடம்.
உண்டுமுடித்துக் கிளம்புகையில்
அய்ம்பது ரூபாய் கொடுத்து
அப்பப்போ வருவேன் என அரவணைத்தாய் அவனை.
அசாம்காரனின் தமிழில் தொலைந்து
விடைபெற்ற வினாடி வரை நீ
என் முகம் பார்த்த நினைவில்லை.
ஆளுக்கொரு திசையில் பயணம் தொடர்கையில்
அலைபேசியில் சொன்னாய்
'நீ இன்று கூடுதல் அழகு' என்று.
வார்த்தைகளில் தொலையும் மனசில்
வாழுகிறது அன்பு குறையேதுமின்றி.

1 comment: