Saturday 26 January 2019

ஆந்தைகள் அலறும் இந்நிசியில்
அணங்கொருத்தியின் அழுகுரல்
இணைந்து ஒலிக்கிறது
கூகைக்குக் கிடைத்திடுமோர் இகல்பொழுது
பகல் பார்த்து வெல்லும் காக்கையின் தந்திரமும் அறிந்தாளில்லை.
காலிலோ
கழுத்திலோ
சிறுகயிற்றுக்கு அஞ்சிய பிடிதானே இவளும்
இவளொத்த பலரும்.

No comments:

Post a Comment