Wednesday 2 December 2020

ஒரு மழைப்பொழுதின் தனிமை சுடுவதில்லை
கொட்டித்தீர்க்கும் மழையிடம்
மனதில் பட்டதை பேசித்தீர்க்கலாம்
நசநசக்கும் மழையோடு
செல்லச்சண்டை போடலாம்
அடர்தூறலோடு ஆடிக்களிக்கலாம்
விடாது பெய்யும் மழையோடு
உரிமையோடு சினக்கலாம்
சாரலோடு சமரசம் ஆகலாம்
மழையென்பது மனதோடு பேசும் நட்பன்றி வேறென்ன ❤️

No comments:

Post a Comment