இதயம் கீறும் உன் நினைவுகள்.
வழுவழுத்த தரையில் திக்குமுக்காடும் அரவமென
அரவமின்றி அலைபாயும்.
கழுத்தைக் கட்டிக் கொஞ்சும் மழலையென
கணநேரம் கொண்டாடும்.
அழைக்கும் பொழுதில் பழிப்புக்காட்டி ஓடும் குழந்தையென போக்குக்காட்டும்.
அணைத்தே மடிசாய்க்கும் அன்னையென
அவதாரமெடுக்கும்.
வேண்டாமென்றே விலகி நின்றாலும்
அருகில் வந்து நின்று
அடாவடியாக ஆக்கிரமிக்கும்.
12/08/2021