Tuesday 12 January 2016

ஆக்கிரமிப்பு

அத்துமீறிய ஆக்கிரமிப்புகளை
அகற்றச் சொன்னது மாநகராட்சி.
உன் நினைவுகளை...?

Sunday 10 January 2016

வான் மறந்த...

சிட்டுக்குருவிகள்
சிறகடித்துப் பறந்தவானில்
சிக்னல் தேடி அலைகின்றன
குறுஞ்செய்திகள்.

Friday 8 January 2016

தூவானம்..

காத்திருந்த மணித்துளிகளின் எண்ணிக்கையாய்
மழைத்துளிகளை சேமித்துக்கொண்டேன்
மழைவிட்டும் தூவானம் விடவில்லை.
அவன் வருகை குறித்த
அய்யம் ஏதுமில்லை.

எனக்கானது.

வெற்றுப் பார்வையென எல்லோருக்கும் அது.
உன் விழி
வீசிச் செல்லும் சொற்களைக் கோர்ப்பவளுக்குத்தானே தெரியும்.
அது எனக்கான கவிதையென்று.

Tuesday 5 January 2016

நேரமில்ல...

நேரமில்லன்னு சொல்றது உண்மையிலேயே நேரமில்லையா மனமில்லையா?
எதுவானாலும் இப்ப நேரமில்ல, பிறகு வரேன்

Sunday 3 January 2016

ச்சும்மா...

ஞாயிறு என்பது ஓய்வின் பொழுதாயிருந்தது ஒரு கனாக்காலமாகிப் போனது. அதிகபட்சம் ஒருமணிநேரக் கூடுதல் தூக்கம் மட்டுமே கொண்டாட்டமான அம்சம் எங்கள் ஞாயிறில். அசால்ட்டா தாமதமா எழுந்து காபி முடிச்சுப் பார்த்தா ஆகுது மணி 9.30. காலையும் மதியமும் கலக்கும் ஒரு பொழுதில் சிற்றுண்டியா பேருண்டியா எதைத் தின்பது? மதிய உணவென்பது மாலையைத் தொட்டுவிட இரவு ஏனோ திங்களின் நினைவில் இறுக்கமாகிப் போகிறது.
--------------------------------------------------------------
இது ஓய்வின் கொண்டாட்டமா இல்லை ஒழுங்கீனமா?

Saturday 2 January 2016

நட்பூ மலர..

Bஒவ்வொரு நாளும் விழிக்கும்போது
உனக்குள் புன்னகை செய்துகொள்.
எதிர்ப்படும் முதல் முகத்தைப் பார்த்து
இலேசாய் இதழ் விரித்திடு.
சிற்றுண்டி பரிமாறும்வேளை
சிறிது சிரிப்பையும் சேர்த்தே பரிமாறு.
வேலைப்பளுவில் இடுப்பொடியும் நேரம்
தேநீர் தரும் சிறுவனைப்பார்த்து
சிறிதே சிரித்து நன்றி சொல்.
காணும் மனிதரிடம் புன்னகை செய்.
காலமெல்லாம் சிரிப்பு நம் சொந்தமாயிருக்கும்.
ஒரு புன்னகையை மட்டும் விலையெனக் கொடுத்து
உலகையே உனதாக்கிக்கொள்.
நட்டம் ஒன்றும் யாருக்குமில்லை.
மாறாய்
கொடுப்பவர்க்கும் பெறுபவருக்கும்
கிடைக்கும் ஒரு நட்பூ.

                                   3/1/2016

Friday 1 January 2016

அன்பால் இணைவோம்.

அன்பிற்கில்லை அடைக்கும் தாழ்.