Wednesday 27 April 2016

கோடைமழை

உன் பிரியத்தின் வாசலில் நிற்கிறேன் கரங்கள் ஏந்தி.
மொத்தத்தையும் தருகிறாய்
இதயம் திறந்து.
செய்வதறியாமல் திகைக்கிறேன்
கோடையின் வெம்மை தணிக்கும்
ஒரு குவளை நீராய் என்
உயிரை நனைக்கிறாய் தோழா.