Wednesday 14 June 2017

ஏதுமற்று

மௌனத்தின் பேரிரைச்சல் மனமெங்கும்.
ஏதுமற்றதன் கனம்
இயங்குதிறனைக் குறைக்கிறது.
யாருமற்ற தனிமையின் நெரிசல்
புழுக்கம் கூட்டுகிறது.
இதழுக்குள் சிறைப்பட்ட வார்த்தைகளின் உக்கிரம் எரிக்கிறது.
தேடியது எதுவென்றறியாமல்
இல்லை என்ற விடையைச்
சுமக்கவியலாமல் சுமந்து திரிகிறேன்
உண்டென்பது எதுவோ?
விழி காண்பதும்
செவி கேட்பதும்
மனம் உணர்ந்ததும் மாயையோ?

No comments:

Post a Comment