Sunday 30 December 2018

எப்போதும் தனித்திருப்பதேயில்லை.
உன் சொல்லொன்று செவியோரத்தில்.
உன் பார்வையொன்று
விழியோரத்தில்.
உன் விரலொன்று பிணைத்தபடி.
உன் கோபமொன்றில் அஞ்சியபடி
உன் தொடுகையில் கரைந்தபடி
உன் அழுகையில் கலங்கியபடி.
எப்போதும் எப்போதும்.
தனித்திருப்பதேயில்லை
ஒருபோதும். 💜

No comments:

Post a Comment