Wednesday 5 September 2018

அன்பெனும் ஆழிப்பேரலையில் மூழ்கித் தவிக்கிறேன்
சிப்பிகள் காலில் இடற
இருகை கொண்டு சேகரம் செய்கிறேன்
முத்தினை மறந்து.
மூழ்கியபின் முத்தென்ன சிப்பியென்ன
கடலலையின் தாலாட்டில்
கண்மயங்கிக் கிடக்கிறேன்
அலை தழுவுது உடலை அரவமென
பிரபஞ்ச வெளியின் பேரழகெல்லாம்
கடல் கொண்டது போக மீதமே.

No comments:

Post a Comment